இடுகைகள்

நவம்பர், 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அறிவுகெட்ட பெற்றோரிடம் வளரும் குழந்தைகளின் எதிர்காலம்?

பெற்றோர்கள் பொதுவாகவே குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கவேண்டும் என்று பல தியாகங்களையும் செய்து வளர்ப்பார்கள் என்பதுதான் உலக நியதி. ஆனால் இதற்கு விதிவிலக்காக பலர் இருக்கிறார்கள் என்பதை சமீபத்திலே நான் வாசித்த செய்திகள் நிரூபிக்கின்றன. 1.கோவை விபத்தில் மூளை செயலிழந்த இதயேந்திரனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதை பத்திரிக்கைகள் பெரிதாக எழுதியதுபோல், தாமும் தமது மூளை வளர்ச்சி குறைவான ஆனால் நன்றாக நடமாடிக் கொண்டிருக்கின்ற மகனின் உறுப்புகளையும் தானம் செய்தால் புகழ் பெறுவோம் என்று ஒரு பெற்றோர் கருதினர். கலெக்டர் அலுவலகம் சென்று இதைச் சொன்னபின்னர் பலராலும் அறிவுறுத்தப்பட்டபின் தங்களது தவறை உணர்ந்து கொண்டார்கள் என்று தோன்றுகிறது. இவர்களுக்கு தாம் பெற்ற மகன் துறுதுறுவென ஓடியாடி இருக்கும் காலத்திலேயே உறுப்புத்தானம் செய்தால் இறந்து விடுவான் என்பது தோன்றவில்லையா ? அல்லது மூளை வளர்ச்சி இல்லாத மகனின் தொல்லை தீர்வதுடன் புகழும் கிடைக்கும் என்று நினைத்ததால் இப்படி ஒரு முடிவுக்கு வந்தார்களா ? http://dinamalar.com/fpnnews.asp?News_id=2243&cls=row3 2.செயின்ட் ஜான், அரிசோனா (USA) எட்டு வயது மகனு

கடவுளின் கண்

படம்
மின்னஞ்சலில் வந்த செய்தி : அன்புடையீர், நீங்கள் இங்கே காண்பது காண்பதற்கு மிகவும் அரிய ஒரு புகைப்படம். 3000 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த நிகழ்வை நாசா விஞ்ஞானிகள் ஹபிள் டெலஸ்கோப்பில் படம் பிடித்து "கடவுளின் கண்" என பெயரிட்டுள்ளனர். இந்த புகைப்படம் இதுவரை பல அதிசயங்களை நிகழ்த்தியுள்ளது. கண்களை ஒரு நிமிடம் மூடி, உங்கள் விருப்பத்தை மனத்தில் நினைத்து விட்டு இந்த படத்தைப் பாருங்கள். உங்கள் விருப்பம் நிறைவேறும். இந்த படத்தை நீங்கள் மட்டுமே வைத்திராமல், உடனே ஏழு பேருக்கு மின்னஞ்சல் செய்யவும். இப்படிக்கு, #$@^&%* விசாரித்த உண்மை : இது ஹெலிக்ஸ் நெபுலாவின் புகைப்படம். நாசா வலைத்தளத்தில் 2003 -ல் வெளியிட்டிருக்கிறார்கள். இது பல ஃபோட்டோக்களில் இருந்து ஒன்றிக்கப்பட்டது. இதில் இருக்கும் நிறங்கள் அந்த நெபுலாவின் இயற்கையான நிறங்களல்ல. மேலும் 3000 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்வது என்பது தவறு. எப்போதும் இதை காணமுடியும். NASA Picture of the Day டிஸ்க்ளெய்மர் : இதை முன்பே நீங்கள் படித்திருந்தால், மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்வதில் தவறில்லை.

21-ம் நூற்றாண்டிலும் காட்டுமிராண்டிகள் வாழ்கிறார்கள்

21-ம் நூற்றாண்டில் காட்டுமிராண்டிகள் எங்கே வாழ்கிறார்கள் என்கிறீர்களா? இஸ்லாமிய பயங்கரவாதிகள் கொடுங்கோலாட்சி செய்துவரும் சோமாலியாவின் ஒரு பகுதியில்தான். 13 வயதான ஒரு சிறுமியை மூன்றுபேர் கெடுத்துவிட்டார்கள். அவரது தந்தையாரும் குடும்பத்தாரும் அதைக்குறித்து ஷரியத் கோர்ட்டில் புகார் கொடுக்கச் சென்ற நேரத்தில், சிறுமிக்கு விபச்சாரி என்ற பட்டம் கட்டி சிறையில் வைத்தனர். பிறகு அவள் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்து விட்டனர். கிஸ்மயோ என்ற இடத்தில் நடந்த இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் இப்படி கூறுகிறார் : ஏறத்தாழ 1000 பேர் அந்த இடத்தில் குழுமினர். இரண்டு மணி நேரம் கழித்து இஸ்லாமிய அதிகாரிகள் அப்பெண்ணை அங்கே கொண்டுவந்தனர். அப்பெண் அழுகையுடன் கேட்டாள் : "என்ன வேண்டும் உங்களுக்கு ?" "அல்லா எங்களுக்கு கூறியபடி நாங்கள் உனக்குச் செய்யப்போகிறோம்" "ஐயோ நான் போகமாட்டேன். என்னை விட்டுவிடுங்கள். என்னை விட்டுவிடுங்கள்." படுபாதகர்கள் அவளை ஆள் அளவு உள்ள ஒரு குழிக்குள் நிறுத்தி, கழுத்து வரை மண்ணால் மூடினர். பின்னர் 50 பேர் கற்களை அவள் தலையில் எறிந்து கொன்றனர். ம