21-ம் நூற்றாண்டிலும் காட்டுமிராண்டிகள் வாழ்கிறார்கள்

21-ம் நூற்றாண்டில் காட்டுமிராண்டிகள் எங்கே வாழ்கிறார்கள் என்கிறீர்களா? இஸ்லாமிய பயங்கரவாதிகள் கொடுங்கோலாட்சி செய்துவரும் சோமாலியாவின் ஒரு பகுதியில்தான்.

13 வயதான ஒரு சிறுமியை மூன்றுபேர் கெடுத்துவிட்டார்கள். அவரது தந்தையாரும் குடும்பத்தாரும் அதைக்குறித்து ஷரியத் கோர்ட்டில் புகார் கொடுக்கச் சென்ற நேரத்தில், சிறுமிக்கு விபச்சாரி என்ற பட்டம் கட்டி சிறையில் வைத்தனர். பிறகு அவள் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்து விட்டனர்.

கிஸ்மயோ என்ற இடத்தில் நடந்த இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் இப்படி கூறுகிறார் :

ஏறத்தாழ 1000 பேர் அந்த இடத்தில் குழுமினர். இரண்டு மணி நேரம் கழித்து இஸ்லாமிய அதிகாரிகள் அப்பெண்ணை அங்கே கொண்டுவந்தனர். அப்பெண் அழுகையுடன் கேட்டாள் :

"என்ன வேண்டும் உங்களுக்கு ?"

"அல்லா எங்களுக்கு கூறியபடி நாங்கள் உனக்குச் செய்யப்போகிறோம்"

"ஐயோ நான் போகமாட்டேன். என்னை விட்டுவிடுங்கள். என்னை விட்டுவிடுங்கள்."

படுபாதகர்கள் அவளை ஆள் அளவு உள்ள ஒரு குழிக்குள் நிறுத்தி, கழுத்து வரை மண்ணால் மூடினர். பின்னர் 50 பேர் கற்களை அவள் தலையில் எறிந்து கொன்றனர்.

மனித நாகரிகம் எவ்வளவு வளர்ந்தாலும், மனித நேயம் பற்றி உலகெல்லாம் கூக்குரலிட்டாலும், காட்டுமிராண்டிகள் இடையிடையே முளைக்கத்தான் செய்கிறார்கள்.

http://news.bbc.co.uk/2/hi/africa/7708169.stm

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறிவுகெட்ட பெற்றோரிடம் வளரும் குழந்தைகளின் எதிர்காலம்?

கடவுளின் கண்

ஐரோப்பாவில் ‘பெட்யா’ ரேன்சம்வேர் தாக்குதல்: பெரிய அளவில் இடையூறு